இலங்கையில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.

கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 09 பகுதியை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பண்டாரகம பகுதியை சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.